கொரோனாவால் கொடூரமான மரணமா.? பீதியில் பொதுமக்கள்!
ஸ்பெயின் நாட்டில் ஒரு பெண்மணியின் வீட்டில் துர்நாற்றம் அடிப்பதாக அருகில் இருந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து, காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் கொலம்பியா நாட்டை சேர்ந்த 79 வயது கிளாரென்ஸ் டோபோன் என்பவர் 1996 இலிருந்து அந்த குடியிருப்பு பகுதியில் தனித்து வாழ்ந்து வந்துள்ளார்.
அவர் வளர்த்த 7ல் 5 பூனைகள் அவரது உடலை பாதிக்கின்ற நிலையில் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மூன்று மாதங்களுக்கு முன்பு அவர் உயிரிழந்து இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஒருவேளை இவர் கொரோனா காரணமாக உயிர் இருந்திருப்பாரோ என்பது அக்கம்பக்கத்தினர் அச்சம் அடைய செய்துள்ளது. அவர் அடிக்கடி உள்ளூர் சந்தைகளுக்கு பழங்கள் வாங்க வருவார் என்றும் அன்றாடம் தெருவோர நாய்களுக்கு அவர் உணவளித்து வந்ததாகவும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
மேலும், ஐந்து பூனைகளும் உயிரிழந்த நிலையில், அவர் குடியிருப்பு பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்பட்டுள்ளது .அவருக்கு உறவினர் என்று யாரும் இல்லை என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.