ஆசிரியையின் மீது கூலி தொழிலாளியான கணவனின் வெறிச்செயல்
இந்தியாவில் நாமக்கல் அடுத்த தூசூர் ஊராட்சி சம்பா மேடு பகுதியைச் சேர்ந்த ராஜா பிரமிளா தம்பதிக்கு தரம் 11 இல் கல்வி பயிலும் மகளும் தரம் 10 இல் கல்வி பயிலும் மகனும் உள்ளனர்.
கணவன் ராஜா கூலி வேலை செய்த நிலையில் மனைவி பிரமிளா தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
சம்பவம்
இந் நிலையில் நேற்று இரவு கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கணவன் தனது மனைவியை வீட்டிலிருந்த அருவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதையடுத்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த பிரமிளா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இச் சம்பவத்தை தொடர்ந்து காவல் நிலையம் சென்ற கணவர் தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் பொலிஸார் பிரமிளாவின் சடலத்தை மீட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தான் தனது மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த நாமக்கல் போலீசார், பிரமிளா சடலத்தை மீட்டு,
பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.