சைபர் தாக்குதலால் ஐரோப்பா முழுவதும் விமான நிலையங்கள் பாதிப்பு; பயணிகள் பெரும் அவதி
ஐரோப்பா முழுவதும் சைபர் தாக்குதலால் விமான நிலையங்கள் பாதிப்புகளை எதிர்கொள்கின்றன.
இந்த சைபர் தாக்குதலால் விமானங்கள் தாமதமாகியுள்ளதுடன் பிரஸ்ஸல்ஸ், பெர்லின் மற்றும் லண்டன் விமான நிலையங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து
செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான சேவை வழங்குநரை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலைத் தொடர்ந்து, ஐரோப்பாவின் பல முக்கிய விமான நிலையங்களின் செயல்பாடுகள் சனிக்கிழமை இடையூறுகளை சந்தித்தன.
அதேவேளை லண்டன், பெர்லின் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தாமதமாகின அல்லது ரத்து செய்யப்பட்டன.
செப்டம்பர் 19, வெள்ளிக்கிழமை இரவு, செக்-இன் மற்றும் போர்டிங் அமைப்புகளுக்கான சேவை வழங்குநருக்கு எதிராக சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகின்றது.
இது பிரஸ்ஸல்ஸ் விமான நிலையம் உட்பட பல ஐரோப்பிய விமான நிலையங்களைப் பாதித்தது என்று பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தின் இணையதளத்தில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.