மியன்மாரில் 34 லட்சம் மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!
மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடருமானால் , சுமார் 34 லட்சம் மக்கள் பட்டினிக்கு இலக்காக கூடும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.
மியன்மாரில் இராணுவத்திற்கு எதிரான செயற்பாடுகளால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தொழிற்சாலைகள் மூடிக்கிடக்கின்றன.
இதன் காரணமாக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. பெரும்பாலான மக்கள் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். மேலும், அனைத்து பொருட்களின் விலையும் மிக அதிகமாக உயர்ந்துவிட்டது. பலருக்கு உணவு பொருட்கள் வாங்க கூட பணம் இல்லை.
இதனால் சாப்பிடுவதை குறைத்துக் கொண்டனர். இதே நிலை அங்கு தொடர்ந்தும் நீடித்தால் இன்னும் சில மாதங்களில் பெரும்பாலான மக்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்படும் என சர்வதேச உணவு அமைப்பு எச்சரித்துள்ளது.
எனவே சர்வதேச சமுதாயம் மியான்மார் மக்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என சர்வதேச உணவு அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.