ஈரான் இதை மட்டும் செய்தால் பெரும் ஆபத்து நிச்சயம் ; எச்சரிக்கும் மெக்ரோன்
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்து என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுவதாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு சர்வதேச அணுசக்தி முகமை உட்பட பல்வேறு உலக நாடுகள் அதிருப்தி தெரிவித்தன.
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம்
இந்த நிலையில், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து ஈரான் வெளியேறுவது ஆபத்தானது என்று பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக மெக்ரோன் கூறுகையில்,
ஈரான் அணுசக்தி நிலைகள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் சிறப்பான ஒன்று. ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து ஈரான் வெளியேறுவது மோசமானதாகும்.
மேலும், இது இந்த அமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைந்து விடும். எனவே, அணு ஆயுதங்கள் உற்பத்தியை ஈரான் மீண்டும் தொடங்குவதை தடுக்க வேண்டும், என்றார்.