கொரோனாவால் இறந்த தந்தை: மன வேதனையில் மகள் மேற்கொண்ட விபரீத முடிவு! பகீர் சம்பவம்
இந்தியாவின் ராஜஸ்தானின் பார்மரைச் சேர்ந்த 33 வயதான ஒரு பெண் நேற்று மாலை தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா காரணமாக இறந்த தனது 73 வயதான தந்தையின் இறுதி சடங்கில் எரியும் சிதையில் குதித்து தானும் இறக்கத் துணிந்துள்ள அவர், தனது தந்தையின் மரணத்தால் மன வேதனையுடன் இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இறந்த வயதான கொரோனா நோயாளியின் மூன்று மகள்கள் உடலுடன் தகன மைதானத்திற்கு சென்றனர். அவருக்கு மகன்கள் இல்லை. அவரது மகள்கள் தனது இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று அவர் விரும்பினார்.
இறந்த வயதான கொரோனா நோயாளியின் உடல் தகனம் செய்யும் போது, மகேஸ்வரியின் திருமணமாகாத மகள் சந்திர மகேஸ்வரி காலா தந்தையின் சடலம் எரிந்து கொண்டிருந்த நிலையில் அதில் குதித்துள்ளார்.
எனினும், மற்ற குடும்ப உறுப்பினர்களால் அவர் வெளியேற்றப்பட்டார். பின்னர் உடனடியாக சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், ஜோத்பூரில் உள்ள உயர் மருத்துவ வசதிக்கு அவர் பரிந்துரைக்கப்பட்டார். அங்கு அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு 70 சதவீத தீக்காயங்கள் உள்ள நிலையில் அவரது உடல்நிலை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.