இறந்தவர்களை அடக்கம் இடமில்லை; கொரோனாவால் திணறும் பிரேசில்
பிரேசிலில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு பழைய கல்லறைகளை சுத்தம் செய்து புதிய உடல்களை அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும்க் கூறப்படுகின்றது.
பிரேசிலில் நாளாந்தம் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்படுகின்ற நிலையில் நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.
இதன் காரணமாக பிரேசிலின் மிகப்பெரிய நகரமான சாவோ பவுலோ நகரில் கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய கல்லறைகளில் இடப்பற்றாக்குறை நிலவுகின்றது.
இந்நிலையில், ஏற்கனவே இருக்கும் கல்லறைகளை அகழ்ந்து அவற்றில் இருக்கும் மனித எச்சங்களை அகற்றி விட்டு, அங்கு மீண்டும் புதிய உடல்களை அங்கு அடக்கும் நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.