கனடாவில் நிலச்சரிவுக்கு மொத்த குடும்பத்தையும் இழந்த நபர்: மீட்பு நடவடிக்கைகள் துரிதம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் கனமழைக்கு பின்னர் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ள தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. பிரதான சாலை 99ல் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய நால்வரை இன்னமும் தேடி வருவதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை பிரதான சாலை 99 வழையாக கடந்து செல்ல முயன்ற 35 வயதான Mirsad Hadzic நிலச்சரிவில் சிக்கி மாயமாகியுள்ளார். இவரது மனைவி, இவர்கள் சென்ற வாகனத்தினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அடுத்தடுத்து இரண்டு நிலச்சரிவுகள் ஒரே பகுதியில் ஏற்பட்டதாலையே, அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. முதல் நிலச்சரிவை அடுத்து, அப்பகுதியில் கடந்து செல்ல முயன்ற அனைத்து வாகனங்களும் தடுத்து நிறுத்தப்பட்டன.
ஆனால் தொடர்ந்து இரண்டாவது நிலச்சரிவில் சிக்கி 7 வாகனங்கள் வரையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. Mirsad-ன் சகோதரர் நிஹாத் தெரிவிக்கையில், சகோதரரின் மனைவி இறந்தது எங்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னமும் நிஹாத் தொடர்பில் தகவல் ஏதும் இல்லை என தெரிவித்துள்ளார்.
சம்பவப்பகுதியில் இருந்த சிலரிடம் தாம் விசாரித்ததாகவும், அவர்கள் கூறிய தகவலின் அடிப்படையில், தமது சகோதரர் நிலச்சரிவில் சிக்கி புதைந்து போயிருக்கலாம் என்றே நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மீட்பு நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று பகல் 10 மணிக்கு தம்மை அழைத்து பேசியதாகவும், அதன் பின்னர் சில மணி நேரத்திற்கு பிறகு பொலிசாரே தங்களை தொடர்பு கொண்டதாகவும் நிஹாத் தெரிவித்துள்ளார்.
இதே நிலை தான் Gordon மற்றும் Kathie Rennie ஆகியோருக்கும் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இருவரும் தப்பியுள்ளனர்.