கனடாவை உலுக்கிய சம்பவத்தின் மூன்றாவது ஆண்டு: மக்கள் கண்ணீர் அஞ்சலி
ரொறன்ரோவில் இளைஞரால் முன்னெடுக்கப்பட்ட கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் மூன்றாவது ஆண்டு நினைவு நாளில் மக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Withrow Park பகுதியில் குவிந்த மக்கள் இரு மரங்களுக்கு அருகே பூக்கள் வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். Danforth பகுதியில் நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்ததுடன் 18 வயது Reese Fallon மற்றும் 10 வயது Juliana Kozis ஆகிய இருவரும் கொல்லப்பட்டனர்.
2018 ஜூலை 22ம் திகதியே குறித்த பகீர் சம்பவம் அரங்கேறியது. உணவ முற்றத்தில் அமர்ந்திருந்தவர்கள், அதுவழியாக நடந்து சென்றவர்கள் என பலர் அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இலக்கானார்கள்.
தொடர்ந்து பொலிசார் பதிலுக்கு தாக்குதல் தொடுக்க, துப்பாக்கி குண்டு காயங்களுடன் மரணமடைந்த நிலையில் தாக்குதல்தாரியின் சடலத்தை பொலிசார் கைப்பற்றினர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த தாக்குதல்தாரி 29 வயது பைசல் உசேன் என்பது தெரிய வந்தது.
இச்சம்பவத்தில் தாக்குதல்தாரியுடன் மூவர் கொல்லப்பட்டதுடன் 13 பேர்கள் துப்பாக்கி குண்டு காயங்களுடன் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.