சென்னை மக்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்திய மருத்துவர் ஒருவரின் மரணம்!
சென்னையில் 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து பொதுமக்களுக்கு சேவை செய்த மருத்துவர் கோபால் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மருத்துவரின் மரணம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் மருத்துவர் கோபால். இவர் கடந்த பல ஆண்டுகளாக ரூபாய் பத்துக்கு அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு மருத்துவம் பார்த்தார்.
குறித்த மருத்துவர் சென்னை ராஜீவ் காந்தி மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மிகச் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி உள்ளார்.
10 ரூபாய்க்கு மிகச் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் அவரிடம் அந்த பகுதி மக்கள் சிகிச்சை பெற்று பலனடைந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட மருத்துவர் கோபால் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை வட சென்னை மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேவேளை ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பத்து ரூபாய்க்கு மருத்துவம் பார்த்த சென்னை வில்லிவாக்கம் டாக்டர் மோகன் ரெட்டி என்பவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது