நொறுங்க வைக்கும் 13 வயது கனேடிய சிறுமியின் மரணம்: இருண்ட நாள் என நகர மேயர்
கனடாவின் ஒன்ராறியோ பிராந்தியத்தில் 13 வயது சிறுமி கொரோனாவுக்கு பலியான சம்பவம் மொத்த மக்களையும் உலுக்கியுள்ளது.
பிராந்திய முதல்வர் டக் ஃபோர்டு தெரிவிக்கையில், 13 வயதேயான பிராம்ப்டன் சிறுமி, கொரோனாவுக்கு பலியான சம்பவம் நொறுங்க வைக்கும் நிகழ்வு, கொரோனா பேரழிவு என்ன செய்யும் என்பதற்கு அதிர்ச்சியான நினைவூட்டல் எனவும் தெரிவித்துள்ளார்.
13 வயதேயான எமிலி விக்டோரியா விகாஸ் கடந்த வாரம் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். முந்தைய நாட்களில் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதாக சிறுமி விகாஸ் கூறி வந்த நிலையில், சம்பவத்தன்று மூச்சுபேச்சில்லாமல் தனது சகோதரரால் கண்டெடுக்கப்பட்டார்.
சிறுமி விகாஸின் தாயாரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் ஆக்ஸிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
அந்த குடும்பத்தின் நிலை கண்டு மனம் உடைந்து போயுள்ளதாக குறிப்பிட்டுள்ள டக் ஃப்ஃபோடு, சிறுமியை இழந்து துயரப்படும் அந்த குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோவில் சுமார் 8,000 பேர்கள் கொரோனாவுக்கு இலக்காகியுள்ள நிலையில், 19 வயதுக்கு உட்பட்ட மூவர் மட்டுமே இதுவரை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
சிறுமி ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது மிகுந்த துயரத்தை தருவதாக குறிப்பிட்டுள்ள பிராம்ப்டன் நகர மேயர் Patrick Brown, பிராம்ப்டன் நகருக்கு இது ஒரு இருண்ட நாள் என குறிப்பிட்டுள்ளார்.