பிராம்ப்டனில் பரிதாப நிலையில் மீட்கப்பட்ட குழந்தை மரணம்: நீடிக்கும் மர்மம்
பிராம்ப்டனில் ஒரு குழந்தை மிக ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு பின்னர் மரணமடைந்த நிலையில் பீல் பொலிசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
புதன்கிழமை சுமார் 4.30 மணியளவில் Finlayson Crescent பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
மருத்துவ அவசரம் தொடர்பில் தகவல் அறிந்ததை அடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த குழுவினர், குற்றுயிரான நிலையில் குழந்தை ஒன்றை மீட்டுள்ளனர்.
முதலுதவிக்கு பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை மரணமடைந்ததாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், குழந்தை மரணமடைந்தது தொடர்பாக பீல் பொலிசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இருப்பினும், குழந்தையின் வயது, பாலினம் உள்ளிட்ட எவ்வித தகவலையும் வெளியிட பொலிஸ் தரப்பு மறுத்துள்ளது.
மேலும், குழந்தை ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட காரணம் என்னவென விசாரித்து வருவதாகவும், அதில் சட்டத்திற்கு புறம்பான செயல்பாடுகள் கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் பொலிஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை.