பிரித்தானியாவில் குறைந்து வரும் இறைச்சி நுகர்வோரின் சதவீதம்
பிரித்தானியாவில் தினசரி இறைச்சி நுகர்வோரின் எண்ணிக்கை சுமார் 17 சதவீதம் குறைந்துள்ளதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளன.
இதற்கேற்ற விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வீழ்ச்சியானது தேசிய இலக்கை அடைய போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய உணவையும் மூலோபாயத்தால் நிர்ணயிக்கப்பட்ட இந்த குறிக்கோளானது,முழு பிரிட்டனின் உணவு முறையின் மதிப்பை அடிப்படையாக கொண்டவையாகும்.
மேலும் இந்த வீழ்ச்சியானது அடைத்த பத்து ஆண்டுகளில் சுமார் 30 சதவீதமாக வீழ்ச்சியடைய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து லான்செட் பிளானெட்டேரி ஹெல்த் வெளியிட்ட ஆய்வில், மக்கள் பெரும்பாலும் குறைந்த அளவிலான சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை எடுத்துக்கொண்டனர்.
ஆனால் தற்போது பலரும் வெள்ளை இறைச்சியினை எடுத்து கொள்வதாக தெரியவந்துள்ளது.
சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியினை அதிகம் பயன்படுத்துவோர் நீரிழிவு, இருதய நோய் உள்ளிட்ட உடல் குறைபாடுகளுக்கு ஆளாவர்.