கனடாவுக்கு வர வேண்டிய 6 இலட்சம் டோஸ் தடுப்பு மருந்துகளில் ஏற்பட்டுள்ள தாமதம்!
மொடேர்னா நிறுவனத்திடம் இந்த வாரம் கிடைக்க வேண்டிய சுமார் ஆறு இலட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தடுப்பு மருந்தின் தர உத்தரவாத செயற்பாட்டில் ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக, மொடேர்னா நிறுவனம், கனேடிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
மொடேர்னா நிறுவனத்திடம் இருந்து இந்த வாரம், 8 இலட்சத்து 46 ஆயிரம் தடுப்பு மருந்துகள் கிடைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 இலட்சத்து 55 ஆயிரத்து, 600 மருந்துகளே புதன்கிழமை விநியோகிக்கப்பட்டுள்ளதாக, கனடிய அரசாங்க வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், எஞ்சிய மருந்துகளை அனுப்பும் பணியில் அடுத்த வியாழக்கிழமைக்கு பின்னர் தாமதம் ஏற்படாது என்று நிறுவனம் உறுதியளித்ததுள்ளதாக கூறப்படுகிறது.