முழுமையாக தடுப்பூசி போட்டும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளான ஒன்ராறியோ தம்பதி
முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட ஒன்ராறியோ தம்பதியை ரொறன்ரோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பின்னர் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடாவில் தமது மகனை சந்தித்துவிட்டு ஜூலை 7ம் திகதி ரொறன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கியுள்ளனர் Patricia மற்றும் Basil McDonald தம்பதி.
முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள இருவரும், பயணத்திற்கு 72 மணி நேரம் முன்னர் கொரோனா சோதனையும் முன்னெடுத்துள்ளனர்.
இதனால் தங்கள் பயணத்திற்கும் அதன் பிறகும் எவ்வித சிக்கலும் ஏற்படாது என்றே நம்பியுள்ளனர். தற்போது தங்கள் குடியிருப்புக்கு திரும்பி 9 நாட்கள் தனிமைப்படுத்துதல் முன்னெடுத்துள்ள நிலையில், இதுவரை காரணம் என்ன என்பதை அதிகாரிகள் தரப்பில் தங்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்றே கூறுகின்றனர்.
இருவருமே மாடர்னா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதுடன், தற்போது பயணத்திற்கு முன்னர் தங்களுக்கான தடுப்பூசி தொடர்பான தரவுகளையும் சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிகாகோ விமன நிலையத்தில் தங்களுக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாத நிலையில், தற்போது கனடாவில் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு வலியுறுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.