கடற்கரைகளை நாசம் செய்த பிரிட்டன் மக்கள்
பிரித்தானியாவில் நேற்றைய தினம் நாடு தழுவிய ரீதியில் சகல இடங்களிலும் அதிக வெப்ப நிலை காணப்பட்டடது. இதனை அடுத்து நீண்ட நாட்களுக்கு பின்னர் பெரும் தொகையில் மக்கள் கடற்கரைகளுக்கு சென்று ஒன்று கூடியுள்ளார்கள்.
தற்பொழுது பிரிட்டனில் 2 குடும்பத்தை சேர்ந்த 6 நபர்கள் பொது இடங்களில் கூடலாம் என்ற தளர்வு காணப்படுவதால், கடல்கரைக்கு மக்கள் படை எடுத்ததால் பொலிசாரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் கடல்கரைக்கு சென்ற மக்கள் பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பாக் மற்றும் BBQ எரிபொருட்கள் என்று பல கழிவு பொருட்களை நிலத்தில் வீசி விட்டு சென்றுவிட்டார்கள்.
இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் மக்களும் கவுன்சில் காரர்களும் இணைந்தே இன்று காலை அதனை சுத்தம் செய்துள்ளனர்.
இதேவேளை இவ்வாறு நிலத்தில் கழிவுகளை வீசிச் செல்லும் நபர்களுக்கு தண்டம் அறிவிக்க உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
அதற்காக விசேட கமரா ஒன்றை பொருத்தும் திட்டம் ஒன்றையும் பிரித்தானிய பொலிசார் மேற்கொண்டு வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.




