முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு; பிரான்ஸில் கவனயீர்ப்பு ஒன்று கூடல்!
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில் மிலேச்சத்தமாக அரசபடைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களின், தழிழன அழிப்புக்கு நீதி கோரி 14 ஆண்டான இன்று புலம் பெயர் தேசங்களின் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி பிரான்ஸில் Place de la Bastille எனும் பகுதியில் கவனயீர்ப்பு ஒன்று கூடல் இடம்பெறவுள்ளது. தமிழ் தேசிய உயர்வோடு தழிழர் நாம் இலட்சிய வேட்கையுடன் கொள்கை வழி நின்று நீதிக்காய் போராடுவோம் அணிதிரள்வோம் என்ற தொனிப் பொருளின் கீழ் குறித்த ஒன்று கூடல் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த நிலையில் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டம் என்பது பல்வேறு இழப்புகளையும், வேதனைகளையும் கொண்ட இரத்தம் சிந்தியதாக காணப்படுகின்றது.
இந்தப் போராட்டத்தின் மூலம் பலர் செய்த தியாகங்களை தமிழர்கள் மனதில் கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகும்.
இன்று அபிவிருத்தி பற்றி பேசும் தமிழர்கள், இந்த இழப்புகள் எதற்காக இடம் பெற்றன என்பது பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.