தீக்கிரையான வீடு... உடல் கருகி பலியான ஆசிய குடும்பம்: பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
கனடாவின் கல்கரியில் வெள்ளிக்கிழமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர்கள் தீ விபத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஒன்ராறியோவில் வசித்து வந்த இந்த குடும்பம் சமீபத்தில் மட்டுமே ஆல்பர்ட்டாவுக்கு இடம் பெயர்ந்துள்ளது. தீ விபத்தில் பலியான அனைவரும் பாகிஸ்தான் நாட்டவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குடியிருப்பில் ஏற்பட்ட மின் கசிவாக இருக்கலாம் தீ விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதுவரை விபத்துக்கான முதன்மை காரணம் பொலிசாரால் உறுதிப்படுத்தப்படவில்லை.
மேலும், இது விபத்து எனவும், திட்டமிட்ட செயல் அல்ல எனவும் பொலிசார் குறிப்பிட்டுள்ளனர். இறந்தவர்களில் ஆண் மற்றும் பெண் 38 வயதானவர்கள் எனவும் இன்னொரு 35 வயது பெண், 12 வயதில் சிறுவன் மற்றும் ஒரு சிறுமி, 8 வயதில் ஒரு சிறுமி மற்றும் 4 வயதில் ஒரு சிறுவன் என 7 பேர்கள் உடல் கருகி பலியாகியுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் இருந்து 4 சிறுவர்களும் ஒரு ஆணும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதுடன், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து மத தலைவர்கள், பொதுமக்கள், உறவினர் என அனைவரும் இணைந்து அஞ்சலி கூட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
பெரும்பாலான உறவினர்கள், இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.