பரிஸ்- பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பில் கலந்துரையாடல்
பரிஸ் பொண்டி நகரசபை முதல்வருடன் ஈழத் தமிழ் மக்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றது. 73 வருடங்களாக நடைபெற்றுவரும் தமிழின அழிப்புத் தொடர்பான அனைத்து விடையங்களும் இதன்போது நகரசபை முதல்வருக்கு தெரிவிக்கப்பட்டது.
தொடர்ந்து தமிழ்மக்களின் இனப் பிரச்சனை தொடர்பான பிரான்சு அரசின் நிலைப்பாட்டினை நகரசபை முதல்வர் கேட்டறிந்துகொண்டார். பொண்டி நகரசபை மனித உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுத்துவருகின்றது. அந்தவகையில் ஈழத்தமிழ்மக்களுக்கு தமதுமுழு ஆதரவையும் தெரிவித்திருந்ததுடன் விரைவில் தமிழ்மக்கள் நீதிபெறவேண்டும் என்ற தனது விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
மேலும் தமிழ்மக்கள் தமது நீதியைப் பெறுவதற்கு பொண்டி நகரசபையால் செயல்படுத்தமுடிந்த அனைத்து நகர்வுகளையும் தாம் செயற்படுத்தி தருவோம் என உறுதி அளித்ததுடன் ஒன்றாகப்பயணிப்போம் என்றும் ஒற்றுமையின் அவசியத்தையும் அவர் உணர்த்தினார்.
குறித்த சந்திப்பில் இரு துணைமுல்வர்களும் உயர் அதிகாரிகளும் நகரசபையில் தமிழீழத்தைச்சேர்ந்த பொண்டி நகரசபை உறுப்பினர் செல்வி பிரபாகரன் பிறேமி , பொண்டித் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகி யும் இதில் கலந்துகொண்டார்.
இதேவேளை இக் கலந்துரையாடல் பொண்டித் தமிழ்மக்களின் அரசியல் நகர்வில் ஒரு மையில்க்கல்லாக பார்க்கப்படுகின்றது.


