மகளுக்கு 21 வயதாகும்போது பெற்றோருக்கு தெரியவந்த அதிரவைக்கும் தகவல்... வழங்கப்படும் மிகப்பெரும் தொகை
கனடாவில் வாழும் ஒரு தம்பதியினரின் மகளுக்கு 21 வயதாகும்போதுதான் அந்த அதிரவைக்கும் உண்மை தெரியவந்தது. ஆம், Dan மற்றும் Davina Dixon என்னும் அந்த தம்பதியரின் குழந்தைக்கு தந்தை Dan அல்ல, அவர்கள் குழந்தையின்மை சிகிச்சை செய்துகொண்ட மருத்துவரான Norman Barwin என்பதுதான் அந்த உண்மை.
மருத்துவர் Barwin மீது தம்பதியர் வழக்குத் தொடர, Dan மற்றும் Davina Dixon தம்பதியர் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான தம்பதியர் பாதிக்கப்பட்டிருப்பது பின்னர் தெரியவந்தது. Barwin பலரது உயிரணுக்களை மாற்றியிருந்தார். 17 குழந்தைகளின் தாய்மார்களுக்கு தனது உயிரணுவையே கொடுத்து கருவுறச் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீண்ட காலமாக நடந்து வந்த நிலையில், தற்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் தொகை ஒன்று இழப்பீடாக வழங்கப்பட உள்ளது.
ஆம், மொத்தம் 13.375 மில்லியன் டொலர்கள் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற வழக்குகளில் இவ்வளவு பெரிய தொகை இழப்பீடாக வழங்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.