கரைக்கு திரும்பாத நீச்சல் வீரர்... சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்
ஒன்ராறியோவில் குரோவ் நதியில் நீச்சலடிக்க சென்றவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பகல் அந்த நபர் குரோவ் நதியில் நீச்சலடிக்க சென்றுள்ளார். ஆனால் சுமார் 11.45 மணியளவில் அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் சென்றுள்ளது.
இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, அவரை உயிருடன் மீட்க முயன்றனர். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் மரணமடைந்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
மனக்குழப்பத்தில் இருந்ததாலையே இவ்வாறு நடந்துள்ளதாக அவருடன் இருந்த நண்பர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால் மரணத்திற்கான காரணம் தொடர்பில் விசாரணைக்கு பின்னரே உறுதி செய்யப்படும் எனவும்,
உறவினர்களால் அடையாளம் காணப்பட்ட பிறகு, அவர் தொடர்பிலான தகவல் வெளியிடப்படும் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.