பிரித்தானியா மக்களுக்கு தடுப்பூசி வினியோகம் ; வெளியான தகவல்
பிரித்தானியாவில் இந்த வார இறுதிக்குள் நாட்டின் பாதி பெரியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுவிடும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். பிரித்தானியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அதிகாரப்பூர்வமாக 24,453,221 பேர் தங்கள் முதல் டோஸை பெற்றுள்ளனர். கடந்த வாரம் முழுக்க 2,075,966 பேர் முதன் டோஸை பெற்றனர், அதில் சனிக்கிழமையில் மட்டும் 512,108 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் தடுப்பூசி விநியோகம் அதிகரித்துவருவதால், மக்களுக்கு செலுத்தப்படும் வேகமும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் வரும் வாரத்தில் மட்டும் குறைந்தது 5 மில்லியன் டோஸ்கள் செலுத்தப்படும் என NHS எதிர்பார்க்கிறது.
அதன்படி வார இறுதியில் 26.3 மில்லியன் டோஸ்கள் வழங்கப்படும் - இது பிரித்தானியாவின் மொத்த பெரியவர்களின் எண்ணிக்கையில் சரிபாதியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.