அதிர்ச்சியில் திமுகவினர்... ஆளுநருக்கு பறந்த கடிதம்!
சென்னை கே.கே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி வணிகவியல் துறை ஆசிரியர் ராஜகோபாலன், பள்ளியில் பயின்று வரும் மாணவிகளிடம் ஆபாசமாக பேசுதல், இரட்டை அர்த்தத்தில் சைகை மூலமாக ஆபாசமாக பேசுதல், வீடியோ கால் செய்தல், இணையவகுப்பில் அரைகுறை ஆடையுடன் தோன்றுதல் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆசிரியர் ராஜகோ பாலனின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட மாணவி, இது தொடர்பான விஷயத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார். அதன்பிறகு, காவல்துறை அதிகாரிகள் ராஜகோபாலன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவனிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், பத்ம சேஷாத்ரி விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி களத்தில் இறங்கியுள்ளார்.
பத்ம சேஷாத்ரி பள்ளி விவகாரத்தில் நியாயமான விசாரணையை மேற்கொள்ளலாம் என்றும், உள்நோக்கத்தோடு அரசு செயல்படுவது தெரிய வந்ததால் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழியில்லை என சுப்பிரமணியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் இது குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், திமுக ஆட்சிக்கு வந்த நாட்களில் இருந்தே குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்த ஆசிரியர்கள், அர்ச்சகர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு கவனம் எடுத்து இதுபோன்ற செயல்களை முளையிலேயே கிள்ளி எறிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சினை குறித்து தலைமை செயலாளருக்கு சம்மன் அனுப்பி, அறிக்கை தயாரித்து வழங்கும்படி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.