மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா எப்போ தெரியுமா!
மூன்றாம் சார்லஸ் மன்னரின்(King Charles III) முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறயுள்ளதாக தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த ராணி 2-ம் எலிசபெத்(Queen Elizabeth II) கடந்த மாதம் 8 ஆம் திகதி தனது 96 வயதில் மரணமடைந்தார்.
அதை தொடர்ந்து 2 நாட்களுக்கு பின் அவரது மகன் சார்லஸ் (King Charles III)இங்கிலாந்தின் புதிய மன்னராக ஆனார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார்.
கடந்த மாதம் சார்லஸ் (King Charles III)மன்னர் அரியணை ஏறினார். இந்த நிலையில் மூன்றாம் சார்லஸ் (King Charles III)மன்னரின் முடிசூட்டு விழா, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதன்மூலம், இங்கிலாந்தின் வரலாற்றில் முடிசூட்டப்படும் மிக வயதான நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் விழாவில் மன்னர் சார்லஸ் (King Charles III)அவரது மனைவியுடன் முடிசூட்டப்படுவார்.
அரசராக அவரது ஆட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும். பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்திக்கொண்டு மூன்றாம் சார்லஸ் மன்னர்(King Charles III) அரியணையில் அமர்வார்.
பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ்(King Charles III) மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.
அதன் பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ்(King Charles III) நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
ராணி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) 1953 இல் முடிசூட்டப்பட்டபோது, 129 நாடுகளைச் சேர்ந்த 8,000 விருந்தினர்கள் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு பயணம் செய்தனர்.
ஆனால் மூன்றாம் சார்லஸ் மன்னரின்(King Charles III) முடிசூட்டு விழா எளிமையாக நடைபெறும் தகவல் வெளியாகியுள்ளது.