இதற்குமேல் தாங்கமாட்டார்; ரஷ்ய அதிபருக்கு திகதி குறித்த மருத்துவர்கள்!
ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புடின் பொறுப்பில் இருப்பது இதுதான் கடைசி ஆண்டு என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிக்கு மேற்கு நாடுகளின் சிறப்பு மருத்துவர்கள் குழுவால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் புடின்
இந்நிலையில் தற்போது சிறப்பு மருந்துகளால் மட்டுமே அவர் உயிருடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
புற்றுநோயால் அவதிப்பட்டுவரும் புடினுக்கு தற்போது உலகின் சிறந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், இதுவே அவரது கடைசி கட்டம் எனவும், ஆட்சிப்பொறுப்பில் இருந்து மிக விரைவில் அவர் வெளியேறுவார் எனவும் கூறப்படுகிறது.
ரஷ்யாவில் இதுவரை அறிமுகமாகாத சிறப்பு சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் அந்த சிகிச்சையால் மட்டுமே புடின் தற்போது பொதுவாழ்க்கையில் நீடித்து வருகிறார் எனவும் மருத்துவர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
புடினின் இறுதிகட்டம்
புடினின் இறுதிகட்டம் நெருங்கிவருவதை உணர்ந்த பின்னரும், அவருக்கு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தாலும், கடைசி வரையில் எந்த மருந்தும் பலன் தராது என்றும் மருத்துவர் கூறியதாக தெரிவிக்கபப்டுகின்றது.
அதேவேளை புடின் ஜனாதிபதி பொறுப்பில் இருந்து வெளியேற முடிவு செய்தால், தற்போதைய வேளாண் அமைச்சர் Dmitry Patrushev இடம் அதிகாரத்தை ஒப்படைப்பார் என கூறப்படுகிறது.
இன்னொருவர், தனது முன்னாள் பாதுகாவலரான 50 வயது Alexei Dyumin என்பவரும் பட்டியலில் இருக்கிறார் என கூறுகின்றனர். அதேசமயம் முன்னதாக, இஸ்ரேல் மருத்துவர்களின் கண்காணிப்பில், உயிர் காக்கும் சிகிச்சையில் புடின் உள்ளார் என தகவல் வெளியானது.
எனினும் புடினுக்கு இஸ்ரேல் மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பது உறுதி செய்யப்படவில்லை என்றாலும், வெளிநாட்டு மருத்துவர்களே சிகிற்சை அளிப்பதாகவும் அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.