கல்கரி குத்துச்சண்டை வீரர் மீது மூன்று பெண்கள் புகார்
கல்கரியில் வசிக்கும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் மூன்று பெண்களை துஸ்பிரயோகம் செய்து துன்புறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தற்போது 39 வயதாகும் முன்னாள் குத்துச்சண்டை வீரர் Daniel Walders என்பவர் மீதே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம், பெண் ஒருவர் கல்கரி பொலிசாரை நாடி, தமது காதலர் கொடூரமாக தாக்கி துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கூறி புகார் அளித்துள்ளார்.
மட்டுமின்றி, தமது காதலரால் துன்புறுத்தலுக்கு இலக்கானவர்கள் என மேலும் இரு பெண்கள் தொடர்பிலும் அவர் தகவல் அளித்துள்ளார்.
குறித்த புகாரின் பேரில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், ஆதரங்களின் அடிப்படையில் Daniel Walders மீது பல பிரிவுகளில் வழக்கு பதிந்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பில் பாதிக்கப்பட்ட மூன்று பெண்களும் ஒத்துழைப்பு அளித்ததாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Daniel Walders கடந்த 2013ல் கடைசியாக குத்துச்சண்டையில் களமிறங்கியுள்ளார். தொழில் ரீதியாக விளையாடிய 6 போட்டிகளிலும் Daniel Walders தோல்வியை தழுவியதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பில் மேலதிக தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.