பிரதமர் மோடியின் விசிறியான டொனால்ட் ட்ரம்ப் !
இந்திய பிரதமர் மோடியின் மிகப் பெரிய ரசிகன் தான் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 250-ஆவது சுதந்திர ஆண்டையொட்டி, புது டில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியின்போது அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பை கைப்பேசியில் செர்ஜியோ கோர் தொடர்புகொண்டு கலந்துரையாடியுள்ளார்.
ட்ரம்ப் உரையாடலை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பார்வையாளர்கள் கேட்க வேண்டும் என்பதற்காக, தனது கைப்பேசியை மைக் முன்பாக செர்ஜியோ கோர் வைத்துள்ளார். இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில், ‘எனக்குப் பிரதமர் மோடியிடம் மிகுந்த அன்பு உள்ளது.
அவா் சிறந்த மனிதர். எனது நண்பர். நான் அவரின் மிகப் பெரிய ரசிகன். இதை அவரிடம் தெரியப்படுத்த வேண்டும்.
100% நம்பலாம் என்னையும், அமெரிக்காவையும் இந்தியா 100 சதவீதம் நம்பலாம். தமக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும், எங்கு அழைக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு தெரியும். இந்தியா நேராக அமெரிக்காவைத்தான் அழைக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.