அசைவ பிரியரா நீங்கள்? ஆனால் மறந்தும்கூட இதனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க
வகைவகையான பிரியாணி, நாவூறும் குழம்பு என அசைவ உணவுக்கு அடிமையாகி போனவர்கள் ஏராளம்.
வாரத்தில் இரண்டு முறையாவது, ஏன் தினமும் கூட அசைவ உணவுகள் இல்லாமல் பலருக்கும் நாள்கள் நகராது.
அந்தவையில் அதன் ருசிக்கு அடிமையாகிப்போனவர்கள் உண்டு.
ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடும்போது, ஒருசில உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது.
அது என்னென்ன உணவுகள் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
அசைவ உணவுகளை சுத்தமான தேனுடன் சேர்ந்து சாப்பிடக்கூடாது, இது தேனை நச்சுத்தன்மை நிறைந்ததாக மாற்றிவிடும், மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
வேகவைத்த முள்ளங்கியுடன் அசைவ உணவுகளை சேர்த்து சாப்பிடக்கூடாது, முள்ளங்கி மற்றும் இறைச்சியில் உள்ள புரத ஊட்டச்சத்து அதிகரிப்பதால், உற்பத்தியாகும் ரத்தம் நச்சுத்தன்மை உடையதாக மாற வாய்ப்பு உண்டு.
கிழங்குகள் மற்றும் இறைச்சி செரிமானம் ஆக அதிக நேரம் எடுத்துக்கொள்வதுடன், அது உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். மேலும் இது நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத்தொல்லையை உண்டாக்கும், அத்துடன் முளைகட்டிய பயறு வகைகள் எடுத்துக் கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
பொதுவாகவே மைதாவுக்கு செரிமான சக்தி குறைவு. இவை எளிதில் மலச்சிக்கலை ஏற்படுத்துவதோடு, மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்களுக்கு பிரச்னையை அதிகப்படுத்தும்.
இதேபோன்று கறுப்பு உளுந்துடன் அசைவ உணவுகளை சேர்த்துச் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். செரிமானத்தில் சிரமத்தை ஏற்படுத்துவதோடு வயிற்றுக்கோளாறு, குமட்டல், வாந்தி, படபடப்பு உண்டாக்கும்.
அசைவ உணவுகளுடன் கீரை சேர்த்துச் சாப்பிடுவதால் செரிமானக்கோளாறு ஏற்படும். இதனால் கல்லீரல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மிக குறிப்பாக அசைவ உணவுகளுடன் தயிர் சேர்த்து சாப்பிடக்கூடாது.