அறைகளுக்குள் அடைந்து கிடந்த மக்களுக்கு கனேடிய நகரமொன்று ஏற்பாடு செய்துள்ள வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சம்
இவ்வளவு நாட்களாக அறைகளுக்குள் அடைந்து கிடந்த மக்களுக்காக, கனேடிய நகரமொன்றில் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சம் ஒன்று தயாராகிவருகிறது.
அதாவது, திறந்தவெளி திரையரங்குகளில் இந்த கோடையில் திரைப்படங்களை திரையிட Saskatoon நகரம் முடிவு செய்துள்ளது.
திரைப்படம் என்றாலே மூடியிருக்கும் அமைதியான அரங்குகளுக்குள் அமர்ந்துதான் மக்கள் திரைப்படம் பார்க்கவேண்டியிருக்கும்.
ஆனால், இந்த திறந்தவெளி அரங்குகளில் மக்கள் வெளியே அமர்ந்து தங்கள் நண்பர்களை சந்திப்பதுடன் திரைப்படமும் பார்க்கும் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும் என்கிறார் திரையரங்கு உரிமையாளர்களில் ஒருவரான Denise Kelk.
இந்த வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்த இருக்கும் குழுவில் மற்றொருவரான Trystan Myers கூறும்போது, ’நட்சத்திரங்களுக்குக் கீழ் சினிமா’ என்ற பெயரில், மே மாதம் 7ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12ஆம் திகதி வரை பல திரைப்படங்களை திரையிட இருப்பதாக தெரிவிக்கிறார்.
சிறுவர்களுக்கென்று தனிப்பட்ட முறையில் பல பிரபல கார்ட்டூன் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. Saskatchewan குறிப்பிடத்தக்க அளவில் தடுப்பூசித் திட்டத்தை நிறைவேற்றியுள்ளதையடுத்து, செவ்வாய் அன்று மாகாண அரசு மூன்று கட்ட கொரோனா கட்டுப்பாடுகள் நெகிழ்த்துதல் திட்டத்தை அறிவித்துள்ளதைத் தொடர்ந்து இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
என்றாலும், திறந்த வெளி திரையரங்குகளில் பாப்கார்ன் விற்கும் விடயத்தில் கூட பாதுகாப்புக்குத்தான் முதலிடம் கொடுக்கப்படும் என்கிறார் Meyers.