கனடாவில் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் பயணித்த சாரதிக்கு கடுமையான தண்டனை
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில், அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட இருமடங்கிற்கும் அதிகமாக, மணித்தியாலத்திற்கு 184 கி.மீ வேகத்தில் காரை ஓட்டிச் சென்ற 26 வயது இளைஞரைக் கியூபெக் மாகாணப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை நெடுஞ்சாலை 15 இல் போயஸ்ப்ரியாண்ட் பகுதியில் உள்ள வீதிப் புனரமைப்பு மண்டலத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது.
அங்கு மணிக்கு 80 கி.மீ வேகம் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், இவர் மணிக்கு 184 கி.மீ வேகத்தில் காரைச் செலுத்தியுள்ளார்.

குறித்த நபருக்கு 1,918 கனடிய டாலர் அபராதமும், 24 நெறிமுறைப் புள்ளிகள் குறைப்பும், சாரதி உரிமம் 90 நாட்களுக்கு இடைநிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது.
குறித்த சாரதி மது அல்லது போதைப்பொருள் அருந்திய நிலையில் வாகனத்தை இயக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால், அவரிடமிருந்து பரிசோதனை மாதிரி பெறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் மீது கூடுதல் வழக்குகள் பதிவு செய்யப்பட வாய்ப்புள்ளது. கியூபெக் வீதிகளில் ஏற்படும் உயிரிழப்பு விபத்துகளுக்கு அதிவேகமாக வாகனங்களை இயக்குவதே மிக முக்கியக் காரணமாக அமைகிறது என கியூபெக் மாகாணப் பொலிஸார் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.