45 வருடம் தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட கொரோனாவுக்கு பலி
பிரித்தானியாவின் ஹிண்ட்லி பகுதியை சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் டென்னிஸ் ஸ்மலி என்பவர் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் சுமார் 45 ஆண்டுகள் தொடர்ந்து பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் பல பெண்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டுள்ளதாக முறைப்பாடு எழுந்தது. இந்த நிலையில் குறித்த நபர் கடந்த 2016 ஆம் ஆனது பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதனையடுத்து அவர் மீது சுமார் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து அவர் மீதான வழக்குகள் லிவர்புல் நகரின் வாக்பில்ட் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், விசாரணையின் முடிவில் டென்னிஸ் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.
இதனையடுத்து அவருக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வாக்பில்ட் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 25ஆம் திகதி முதலாவது கொரோனா தடுப்பூசியை பெற்றிருந்தார்.
அதனையடுத்து மார்ச் 2 ஆம் திகதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவந்த அவர் கடந்த மார்ச் 16 ஆம் திகதி உயிரிழந்ததாக கடந்த திங்களன்று வெளியிட்ட அறிக்கையில் சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.