ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் கடல் வழியாக தப்பிச் சென்றனர்

Sri Lanka Easter Attack Sri Lanka
By Kamal Oct 23, 2025 03:56 AM GMT
Report

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேக நபர்களை கடல் வழியாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரதான சந்தேக நபர், உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலரையும் கடல் மார்க்கமாக தப்பிக்க வைத்துள்ளார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கொழும்பு குற்ற விசாரணை பிரிவை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் மீன்பிடி படகு மூலம் செவ்வந்தி இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் கடல் வழியாக தப்பிச் சென்றனர் | Easter Attack Suspects Went Via Sea

கடல் வழியாக தப்பிய தாக்குதல்தாரிகள்  

இந்த குற்றவாளிகளை வெளிநாட்டுக்கு படகு மூலம் அனுப்பி வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்ட ஆனந்தன் என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சில சந்தேக நபர்களையும் இவ்வாறு படகுமூலம் இந்தியாவிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணம் உதயபுரம் மூன்றாம் குறுக்குத் தெருவை வதிவிடமாகக் கொண்ட 29 வயதான ஏ.பீ. ஆனந்தன் என்ற சந்தேக நபர் திஹாரிய பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேக நபருக்கு சொந்தமான கிளிநொச்சியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து மைக்ரோ ராக துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் படகுமூலம் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் பிரதான சூத்திரதாரியாக இந்த ஆனந்தன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆனந்தன் தனது இளைய சகோதரர்கள் இருவருடன் இணைந்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த இரண்டு சகோதரர்கள் மீதும் கேரள கஞ்சா கடத்தல் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் இருவரம் ஏற்கனவே தடுப்புக் காவலில்  தெரிவிக்கப்படுகிறது.

பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் உள்ளிட்ட குற்ற செயல்களுடன் தொடர்புபட்ட 100க்கும் மேற்பட்டவர்களை அண்மைக் காலங்களில் இந்த சகோதரர்கள் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளனர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21-ஆம் திகதி இலங்கையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய சில சந்தேக நபர்கள் கடல் வழியாக தப்பி செல்வதற்கு இந்த நபர் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளார் என விசாரணைகளில் மேலும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தப்பிச்சென்ற சந்தேக நபர்கள் யார் என்பது குறித்து தற்பொழுது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தன் என்பவரின் கையடக்க தொலைபேசியை கொழும்பு குற்ற விசாரணை பிரிவினர் பொறுப்பேற்றுள்ளதாகவும் குறித்த நபருடன் தொடர்பு பேணிய வெளிநாட்டு குற்றவாளிகள் தொடர்பிலும் போதைப்பொருள் வர்த்தகர்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனந்தன் என்ற குறித்த சந்தேக நபரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வது குறித்து பொலிஸார் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US