குழந்தை போல வளர்த்த நாயை காப்பாற்றுவதற்காக மலை விளிம்புக்கு சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்
கனடாவில் குழந்தை போல வளர்த்த நாய்களில் ஒன்று மலை விளிம்பு ஒன்றிற்கு செல்ல, அதைக் காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்திருகிறார் ஒருவர். எட்மண்டனைச் சேர்ந்த James Fenwick (42)க்கு குழந்தைகள் இல்லை.
இரண்டு நாய்களை குழந்தை போல பாசம் காட்டி வளர்த்திருக்கிறார். தனது காதலியுடன் ஆறு ஒன்றின் ஓரமாக காலாற நடந்து சென்று கொண்டிருந்த James, தனது நாய்களில் ஒன்று திடீரென பார்வையிலிருந்து மறையவே, அதைத் தேடிச் சென்றிருக்கிறார்.
பாறைகள் அடர்ந்த அந்த பகுதியில், இரண்டு பாறைகளுக்கிடையே 4 அடி பள்ளத்தில் தன் நாய் சிக்கிக்கொண்டிருப்பதைக் கண்டு, அதை மீட்க கீழே இறங்கியிருக்கிறார் James. திடீரென அவர் தவறி விழ, தன் கண் முன்னாலேயே தன் காதலர் 30 அடி பள்ளத்தில் விழுவதைக் கண்டிருக்கிறார் Jamesஇன் காதலி.
உடனடியாக இறங்க முடியாத இடம் அது என்பதால், இரண்டு பேர் கீழே ஓடும் ஆறு வழியாக பயணித்து James விழுந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள்.
ஆனால், Jamesஐ காப்பாற்ற முடியவில்லை. James குழந்தைகள் போல வளர்த்த நாய்களுக்காக தன் உயிரையே தியாகம் செய்த நிலையில், அவரது குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.