கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் 77.8 சதவீதம்! ஆய்வில் வெளிவந்த தகவல்
இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் அவசர கால பயன்பாட்டுக்கு வந்தது.
இருப்பினும் தடுப்பூசியின் செயல்திறன் குறித்த முழுமையான் ஆய்வுகள் இன்னும் நடாத்தப்பட்டு தான் உள்ளது.
இந்நிலையில், 'தி லான்செட்' என்ற மருத்துவ இதழ் கோவாக்சின் தொடர்பாக ஆய்வு நடத்தி அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.
அதில் கொரோனா வைரஸின் மிகவும் ஆபத்தான டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவுன் இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து லான்செட் அறிக்கை கூறுவதாவது, கோவேக்சின் தடுப்பூசி 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 2 வாரங்களுக்குப் பின்னர் அவர்களது உடலில் ஒரு வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகிறது.
கோவேக்சின் தடுப்பூசி 2 டோஸ்களை செலுத்திக் கொண்டவர்களுக்கு, 2 வாரங்களுக்குப் பின்னர் அவர்களது உடலில் ஒரு வலுவான எதிர்ப்பு சக்தி உருவாகிறது என லான்செட் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வுகள் அவசியம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.