பெட்ரோல் விலையை தொடர்ந்து மின் கட்டணம் உயர்வு! கடும் நெருக்கடியில் தவிக்கும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின் கட்டணமும் அதிகரித்துள்ளது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில ஆண்டுகளாக பாகிஸ்தானில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஒரு புறம் கடுமையான கடன் சுமையும், மறுபுறம் பொருளாதார மந்த நிலையும் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இதனால் பலர் வேலையை இழக்கும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளின் நிதி உதவி இல்லாமல் பாகிஸ்தான் பயங்கர நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அந்நாட்டில் பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. சமீபத்தில் லிட்டருக்கு ரூ.8.03 உயர்த்தப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.145.82 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. த
ற்போது நிலவும் நிதி நெருக்கடியை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்ற நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல் விலையை தொடர்ந்து மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (NEBRA) மின்சார விலையை யூனிட்டுக்கு ரூ.1.68 உயர்த்தியுள்ளது. புதிய கட்டணங்கள் நவம்பர் 1ஆம் திகதி முதல் அமலுக்கு வந்துள்ளன.