பல்பொருள் அங்காடியில் கேக் மற்றும் முட்டைகள் சாப்பிட்ட யானை
தாய்லாந்தில் சுமார் நான்கு டன் எடையுள்ள ஆண் யானை தாய்லாந்தின் வடகிழக்கு நகரமான நகோன் ராட்சசிமாவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றிற்குள் நுழைந்து கேக் முட்டைகள் உண்ணும் காணொளி வெளியாகியுள்ளது.
பிலாய் பியாங் லெக் என்ற அந்த யானை பின்னர் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்குண்டதையும் சிசிடிவி காட்சிகள் காண்பித்துள்ளன.
எனினும் அதிஸ்டவசமாக கடையின் உரிமையாளர் அதனை அங்கிருந்து வெளியே கொண்டு சென்றுள்ளார்.
அந்த யானை இனிப்புகள் கேக் மற்றும் முட்டைகளை சாப்பிட்ட பின்னர் இங்கிருந்து சென்றான் என தெரிவித்துள்ள உரிமையாளர் அவன் இனிப்பு பொருட்களை உண்டது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
யானைகள் அவற்றின் அதீத பசிக்கு பெயர் பெற்றவை.யானை ஒரு நாளைக்கு 150 கிலோ உணவை உண்ணவேண்டும் என சர்வதேச வனவிலங்கு கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
காட்டுயானைகள் மனித உணவின் மீது அதீதமான ஆசையை வளர்த்துக்கொண்டுள்ள என தாய்லாந்தில் உள்ள இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.