பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடலில் விழுந்த ஹெலிகொப்டர்... ஒரு துயர சம்பவம்
பிரிட்டிஷ் கொலம்பியாவில், மரங்களை வெட்டி சுமந்து செல்வதற்கு பயன்படுத்தப்படும் ஹெலிகொப்டர் ஒன்று கடலில் விழுந்து மூழ்கியுள்ளது.
திங்கட்கிழமை மதியம் 2 மணியளவில், Sunshine Coast பகுதியில் அந்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளது.
Egmont பகுதியில் படகு ஓட்டுபவரான Jarvis Gray என்பவர் ரேடியோவில் அந்த ஹெலிகொப்டர் விழுந்த செய்தியைக் கேட்டு உடனடியாக அங்கு விரைந்துள்ளார். ஆனால், அவர் அங்கு சென்று பார்க்கும்போது ஹெலிகொப்டரின் விசிறி மட்டுமே அங்கு கிடந்துள்ளது.
அந்த ஹெலிகொப்டர் மூழ்கியிருக்கலாம் என தான் நம்புவதாக தெரிவிக்கிறார் அவர்.
பொலிசார் அந்த பகுதியில் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டும் பலன் ஒன்றும் கிடைக்கவில்லை.
ஹெலிகொப்டரை செலுத்தியவரை காணவில்லை. அவர் மட்டுமே அந்த ஹெலிகொப்டரில் பயணித்துள்ளார். அவர் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.
இந்த துயர சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.