திடீரென வெடித்த சர்ச்சை: ஊழியர் ஒருவரிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரிய எலான் மஸ்க்
டுவிட்டர் நிறுவனத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் எலான் மஸ்க்கையும், அவரது நிறுவனத்தையும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
உலகளவில் பிரபலமான சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், (Elon Musk) கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 44 பில்லியன் டொலருக்கு வாங்கினார்.
டுவிட்டரை எலான் மஸ்க் கைப்பற்றிய பிறகு, அதில் அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். அதில் ஆட்குறைப்பு நடவடிக்கையும் அடங்கும்.
அண்மையில் டுவிட்டர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 200 ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்திருந்தார். அதில் கணினி பொறியாளர்கள், மேலாளர்கள், கணினி வல்லுநர்கள், உதவியாளர்களும் அடக்கம்.
பணிநீக்கம் செய்யப்பட்ட பலரும் எலான் மஸ்க்கையும், அவரது நிறுவனத்தையும் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்தநிலையில், டுவிட்டரின் மாற்றுத்திறனாளி ஊழியரொருவர் தான் பணியில் நீடிக்கிறேனா இல்லையா என்பதை தெளிவுபடுத்துமாறு போட்ட டுவீட்டிற்கு அவரது மாற்றுத்திறனை சுட்டிக்காட்டிய எலான் மஸ்க், அதனால் அவர் பணிசெய்யவில்லையென குறிப்பிட்டுள்ளார்.
இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரிடம் எலான் மஸ்க் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
தனது மன்னிப்பில் ஹல்லியின் நிலைமையை நான் தவறாகப்புரிந்து கொண்டதற்காக நான் அவரிடம் மன்னிப்புக்கேட்க விரும்புகிறேன். அவர் டுவிட்டரில் நீடிப்பது தொடர்பில் ஆலோசித்து வருகிறேன் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.