டிரம்பிற்காக 2 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்த உலக பணக்காரர்!
அமெரிக்காவில் நடைப்பெற்று முடிந்த அதிபர் தேர்தலுக்காக டொனால்ட் டிரம்பிற்கு உலக பணக்காரான எலான் மஸ்க் 2 ஆயிரம் கோடிக்கும் மேல் செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் அடுத்த மாதம் 20-ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.
இந்த தேர்தலில் டிரம்புக்கு உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் பெரிதும் உறுதுணையாக இருந்துள்ளார்.
டிரம்புக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்ததோடு, டிரம்பின் வெற்றியை உறுதி செய்ய அவரது பிரசார குழுவுக்கு நிதியை வாரி வழங்கினார்.
இந்த நிலையில் தேர்தலின்போது டிரம்பின் வெற்றிக்காக எலான் மஸ்க் மொத்தமாக 270 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,286 கோடி) செலவு செய்தது தற்போது தெரியவந்துள்ளது.
அரசியல் கட்சிக்கு அதிகளவில் நன்கொடை கொடுத்தவர் என்கிற பெருமையை எலான் மஸ்க் பெற்றுள்ளார்.