இதுவரை யாரும் கூறாத காரணத்தை கூறி விடுப்புக்கேட்ட ஊழியர்; முதலாளி வழங்கிய பதிலால் வியப்பில் நெட்டிசன்கள்
ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரியிடம் விடுப்பு கேட்ட சம்பவம் நெட்டிசன்களை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிய நிறுவனம் முதல் பெரிய நிறுவனம் வரை ஊழியர்கள் விடுப்பு எடுக்க பல்வேறு காரணங்களை கூறிகின்றனர். ஆனால் பதவி உயர்வு பெற்ற ஊழியர் ஒருவர் தனது உயர் அதிகாரியிடம் விடுப்புக்காக கூறிய காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது நிறுவனம் ஒன்றில் கடுமையாக வேலை பார்த்த ஊழியர் ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கி சம்பளமும் உயர்த்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போன அந்த ஊழியர், அன்று மது அருந்தி தனது மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளார். எனினும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால், அவரால் அடுத்த நாள் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதர்காக விடுப்பு கேட்க பொய் ஏதும் சொல்லாமல், தான் குடித்ததால் உடல் மந்தமாக இருப்பதாக உண்மையை கூறி மேலதிகாரியிடம் விடுப்புக் கேட்டு வாட்ஸ் அப்-ல் மேசேஜ் அனுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்த மேலதிகாரி, ‘நீங்கள் அதற்கு முழு தகுதியுடையவர். விடுப்புக்காக ஒரு சிறந்த காரணத்தை நீங்கள் பதிவு செய்துள்ளீர்கள்’ என பதிலளித்து விடுப்பும் வழங்கியுள்ளமையை கண்டு நெட்டிசன்கள் பெரும் ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளனர்.