ரஷ்யாவுக்கு தடைவிதிக்க தயாராகும் இங்கிலாந்து!
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யாவைப் புறக்கணிப்பது குறித்து விவாதிக்க இங்கிலாந்து தலைமையில் வரும் 10ம் திகதி சர்வதேச நாடுகளின் மாநாடு நடைபெற உள்ளது.
இது தொடர்பாக 30 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இங்கிலாந்து அரசங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீது போர்த் தொடுத்ததால் ரஷ்யா ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்பதைத் தடை விதிக்க வேண்டும் என்று ஒலிம்பிக்ஸ் விளையாட்டு கமிட்டிக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
எனினும் ஒலிம்பிக்ஸ் கமிட்டி இதனை ஏற்காததால் உக்ரைன் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துவருகிறது.
இதேவேளை ரஷ்யாவைத் தடை செய்யாவிட்டால் 40 நாடுகள் ஒலிம்பிக்சை புறக்கணிக்க நேரிடும் என்று போலந்து அரசங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.