பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட தயக்கம் காட்டும் இங்கிலாந்து
நியூசிலாந்து அணியை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானில் விளையாட தயக்கம் காட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானில் அடுத்த மாதம் 13 மற்றும் 14 திகதிகளில் 2 ரி20 போட்டியில் விளையாட இங்கிலாந்து அணி திட்டமிட்டிருந்தது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தான் தொடரை ரத்து செய்வதாக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்ததை அடுத்து தற்போது இங்கிலாந்து வாரியமும் தயக்கம் காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கள நிலவரத்தை அறிந்து 48 மணி நேரத்தில் இங்கிலாந்து வாரியம் முடிவை அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.