எங்கள் மொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டது இதனால் தான்: ஒன்ராறியோ தாயார் கலக்கம்
மொத்த குடும்பத்திற்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு முதன்மை காரணம் பள்ளியில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் தான் என தாயார் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒன்ராறியோவில் St. Catharine பகுதியை சேர்ந்த தாயார் ஒருவரே பள்ளியில் இருந்தே கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார். கல்வி ஆண்டு தொடங்கிய ஒரு வாரத்திலேயே மூன்று பிள்ளைகளுக்கும் தமக்கும் கணவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் Haley Bateman.
சில வார போராட்டத்திற்கு பிறகு அனைவரும் குணமடைந்தாலும், அந்த தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை என்றே தெரிவித்துள்ளார் அவர். தமது பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் இருந்து கொரோனா பரவல் ஏற்பட்ட காரணம் தொடர்பில் ஏதும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர்,
மூவருக்கு கொரோனா உறுதி செய்ததுடன், 4 வகுப்புகளை மூடியதாகவும் தெரியவந்தது என்றார். தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பள்ளி ஊழியர்களாலையே, இந்த நிலை ஏற்பட்டதாக கூறும் அவர், பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கை முன்னெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களை கண்டிப்பாக பள்ளி வளாகத்தில் அனுமதிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் பள்ளி நிர்வாகம் வெளியிட்ட தகவலில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களில் 95.4 சதவீதம் பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.