கனடாவின் இந்தப் பகுதியில் காற்றின் தரம் குறித்து எச்சரிக்கை
கனடாவின் கல்கரி பகுதியில் காற்றின் தரம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கல்கரி நகரத்தில் தற்போது காட்டுத்தீ புகை பரவல் காரணமாக மிக மோசமான காற்று தரம் நிலவுகிறது.
இதனையடுத்து கனடாவின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைப்பான Environment and Climate Change Canada (ECCC) கல்கரிக்கு காற்று தரம் குறித்த அதிகப்படியான அபாய எச்சரிக்கையை வெளியிட்டது.
அப்போது காற்றின் தரத்தைக் காட்டும் Air Quality Health Index (AQHI) மதிப்பீடு 10+ ஆக இருந்தது. இது "மிகவும் உயர் அபாய நிலை" என்று வகைப்படுத்தப்படுகிறது.
இந்த நிலைகளில் அனைவரின் உடல்நலத்துக்கும் ஆபத்து உள்ளது. வெளியே செல்கின்ற நேரத்தை குறைக்கவும். திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும்விளையாட்டுகள், நிகழ்வுகள் ஆகியவற்றை ரத்து செய்யவும் அல்லது ஒத்திவைக்கவும் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கண்கள், மூக்கு, குரல் குழாய் இரைப்பு, தலைவலி மற்றும் லேசான இருமல் போன்ற நோய் அறிகுறிகள் ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.