ஹிட்லரிடம் இருந்து தப்பித்தவர் புடினால் கொல்லப்பட்டார்!
உக்ரைன் மீது ரஷியா 27 ஆவது நாளாக தொடர்ந்தும் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று இருந்தாலும் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்த நிலையில் ஜெர்மனி நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி ஹிட்லர் நடத்திய நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பிய 96 வயது முதியவர் ரஷிய படையினரின் ஷெல் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் போரிஸ் ரோமன்சென்கோ. இவருக்கு வயது 96 .
இவர் உக்ரைன் நாட்டின் கார்கிவ் பகுதியில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ரஷிய ராணுவம் நடத்திய ஷெல் தாக்குதலில் இவர் உயிரிழந்தார். இது குறித்து உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) டுவிட்டரில்,
Borys Romanchenko, 96, survived four Nazi concentration camps: Buchenwald, Peenemünde, Mittelbau-Dora, Bergen-Belsen. He lived his quiet life in Kharkiv until recently. Last Friday a Russian bomb hit his house and killed him. Unspeakable crime. Survived Hitler, murdered by Putin. pic.twitter.com/QYJ4xrNYC9
— Dmytro Kuleba (@DmytroKuleba) March 21, 2022
96 வயதான போரிஸ் ரோமன்சென்கோ புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ்-டோரா, பெர்கன்-பெல்சன் ஆகிய நான்கு நாஜி வதை முகாம்களில் இருந்து தப்பியவர். அவர் இறப்பதற்கு முன் வரை கார்கீவில் தனது அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.
ஆனால் கடந்த வெள்ளி கிழமை அன்று ரஷிய ராணுவத்தின் வெடிகுண்டு இவரது வீட்டில் விழுந்து இவர் உயிரிழந்தார்.
ஹிட்லரிடம் இருந்து உயிர் பிழைத்த இவர் தற்போது புதினால் கொல்லப்பட்டுள்ளார் என அவர் பதிவிட்டுள்ளார்.