காசாவில் சிக்கியுள்ள பிள்ளைகளை மீட்க கனடா உதவ வேண்டும்: பெற்றோர்கள் கோரிக்கை
போர் சூழல் மிகுந்த காசாவில் சிக்கியுள்ள கனேடியர்களை மீட்க பெடரல் அசராங்கம் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
காசாவில் இருந்து கனடா திரும்ப இதுவரை 160 பேர்கள் பதிவு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் மஹ்மூத் கலஃப் என்பவர் தமது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் காசாவில் உள்ள உறவினர்களை சந்திக்க சென்றுள்ளார்.
ஆனால் இஸ்ரேல்- காசா மோதல் காரணமாக தற்போது காசாவில் இருந்து வெளியேற முடியாமல் சிக்கியுள்ளனர்.
காசாவில் இருந்து வெளியேற வேண்டும் என்றால், எகிப்து வழியாகவே வாய்ப்புள்ளதால், மிக குறைவான எண்ணிக்கையிலானவர்களையே அனுமதிக்கின்றனர்.
அதுவும், பல வாரங்களுக்கு முன்னர் மனு அளிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், பலரும் காசாவில் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையிலேயே கலஃப் குடும்பத்தினர் கனேடிய நிர்வாகம் உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.