மேற்கு ஆப்பிரிக்காவில் பர்கினோ பசோ தங்கச் சுரங்கத்தில் வெடிப்பு விபத்து
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான பர்கினோ பசோவில் பாரிய வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அந்நாட்டின் பாம்புளோரா என்ற இடத்தில் தங்கச்சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.
அந்த சுரங்கத்தில் ஊழியர்கள் பலர் வேலை செய்து கொண்டிருந்த போது சுரங்கத்துக்குள் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 60 பேர் பரிதாபமாக பலியாகினர். இதன்படி மேலும் 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச் சம்பவ இடத்திற்கு விரைந்து காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த வெடிவிபத்தானது பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கத்தை சுத்திகரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட இரசாயனங்களால் ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்நிலையில், வெடிவிபத்து குறித்து விசாரணைகளை அந்நாட்டு காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.