லண்டனில் திடீரென கேட்ட பயங்கர சத்தம்: அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்
லண்டனின் பக்கிங்ஹாம் கிங்ஸ்டண்டிங் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தீ மளமளமென அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் பற்றி எரிந்த தீயை நீண்ட போராட்டத்திற்கு பின் அணைத்தனர்.
எனினும் இந்த தீ விபத்தில் விபத்தில் ஒரு வீடு முழுவதும் எரிந்து தீக்கிரையானதுடன் , அருகில் இருந்த 5 வீடுகளும் தீ விபத்தால் பாதிப்புக்குள்ளானது.
தீ விபத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில் தீக்காயம்பட்டவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் வீட்டில் கியாஸ் எரிவாயு கசிவு காரணமாக வெடி விபத்து ஏற்பட்டு அதன் காரணமாக தீ வீடு முழுக்க பரவியிருக்கலாம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.