ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ள சீன நிறுவனம்!
சீனாவின் ஜேஜியாங் மாகாணத்தை தளமாக கொண்ட தொழில் நிறுவனம் ஒன்று கடந்த ஜூன் 9ம் திகதி வித்தியாசமான விதிமுறை ஒன்றை விதித்துள்ளது.
குறித்த விதிமுறை என்னவென்றால் தங்களுடைய நிறுவனத்தில் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்து கொள்ளும் ஊழியர்கள் வேலையை விட்டு வெளியேற்றபடுவார்கள் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விதிமுறை தொடர்பில் சீன நிறுவனம் தெரிவித்துள்ள விளக்கத்தில்,
திருமணம் மற்றும் குடும்ப உறவின் முக்கியத்துவத்தை ஊழியர்கள் உணரும் சூழலை ஏற்படுத்துவதற்காக இப்படியொரு விதி கொண்டுவரப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, ஒரு நல்ல ஊழியர் என்பதற்கு 4 ஒழுக்க விதிகளை இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அவை என்னவென்றால், சட்டவிரோத உறவுகளை தவிர்ப்பது, திருமணத்திற்கு புறம்பான உறவுவை தவிர்ப்பது, தங்கள் ஜோடியை பாதுகாக்க தவறுவது மற்றும் விவாகரத்தை குறைத்தல் போன்றவையாகும்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் அளித்த பதிலில், இந்த கட்டுப்பாடுகள் நிறுவனத்தின் செயல்திறனை அதிகரிக்க உதவுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
சீனாவின் தொழிலாளர் ஒப்பந்த சட்டத்தின் படி, இந்த விதிமுறை சட்டத்திற்கு புறம்பானது என்றும், ஊழியர்கள் சரியாக வேலை செய்யாவிட்டால் மட்டுமே பணி நீக்கம் செய்ய முடியும் என ஷாங்காயில் உள்ள V&T சட்ட நிறுவனத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சென் டோங் தெரிவித்துள்ளார்.