பயங்கரவாத அலையில் சிக்கியுள்ள பிரபல நாடுகள்!
இஸ்ரேல், அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளதாக பிரதமர் நப்தலி பென்னெட்(Naphtali Bennett) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் மத்திய பகுதியில் அமைந்துள்ள டெல் அவிவ் நகரில் மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளதுடன் பலர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.
மேலும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இஸ்ரேல் வெளியுறவுத்துறை மந்திரிக்கும், அரபு நாடுகளில் வெளியுறவுத்துறை மந்திரிகளுக்கும் இடையேயான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் நப்தாலி பென்னட் (Naphtali Bennett) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இஸ்ரேல் அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய அவசர கூட்டம் கூட்டப்படும். மேலும் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் என் இதயம் இருக்கிறது.
காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விடாமுயற்சியுடன், இரும்புக்கரம் கொண்டு தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவோம்.
எங்களை இங்கிருந்து நகர்த்த பார்க்கிறார்கள், ஆனால் நாங்கள் வெற்றி பெறுவோம் என நப்தாலி பென்னட்(Naphtali Bennett) தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 பயங்கரவாத தாக்குதல் நடந்துள்ள நிலையில் பிரதமர் நப்தாலி பென்னட்(Naphtali Bennett) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.